தமிழகத்தில் செப்.17ம் தேதி மீண்டும் மாபெரும் தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்களை போல வரும் 17 ஆம் தேதியும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு இலக்கு வைத்து ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த 12 ஆம் தேதியன்று மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
செப்.27 முதல் ‘இந்த’ ஆண்ட்ராய்டு போன்களில் YouTube, Gmail தடை? ஷாக் அறிவிப்பு!
இந்த தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் சுமார் 40,000 இடங்களில் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டுமாக வரும் 17 ஆம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதியன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆதார் & PF இணைப்பு டிச.31 வரை நீட்டிப்பு!
தமிழக அரசிடம் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இன்னும் 2 நாட்களில் கூடுதல் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளது’ என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 12 ஆம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாம்களில் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.