தமிழகத்தில் 20 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து!
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மற்றும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மருத்துவ பணிகள் இயக்குனர் குருநாதன் கூறினார்.
கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து:
2019ம் ஆண்டு இறுதியில் தொடங்கி கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கொரோனா உருமாறி பரவியதன் காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடினர். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு முறைபடுத்தியது.
தமிழக அரசு பயிர்க்கடன், 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – EPS வலியுறுத்தல்!
இருப்பினும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக கட்டணம் வசூலித்ததாகவும், மருத்துவ பலனின்றி இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் மீதமுள்ள கட்டணத்தை கட்டிய பின் தான் உடலை தருவதாகவும் சில தனியார் மருத்துவமனைகள் கூறுகின்றன என்று சில புகார்கள் எழுந்துள்ளது. இது பற்றிய புகாரின் பேரில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது. அதனை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்த 20 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை மீண்டும் திருப்பி தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு கோடியே 87 லட்சம் நோயாளிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளி குடும்பங்களுக்கு ரூ.60 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மற்றும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என மருத்துவ பணிகள் இயக்குனர் குருநாதன் கூறினார்.