தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவல் – அமைச்சர் விளக்கம்!
கொரோனா மூன்றாம் அலை வரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது உறுதி செய்யப்படாத தகவல். ஒரு வேலை மூன்றாம் அலை வந்தாலும் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மக்கள் கொரோனா பரவும் அச்சத்தில் ஆழ்ந்தனர். தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இது உருமாறிய கொரோனா வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது அதிக வீரியத்துடன் இருப்பதால் கடந்த வருடத்தை விட பாதிப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. தமிழக அரசு தடுப்பு நடவடிக்கையாக முதலில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மூன்றாம் அலை தாக்கம் – மருத்துவ கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை!
மேலும் ஊரடங்கானது தொற்று பரவல் குறையாத காரணத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 21 வரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் அனைவரும் கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதன் பலனாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. மக்கள் நாள்தோறும் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்புகின்றனர். மேலும் கொரோனா மூன்றாம் அலை வரும் என பெருந்தொற்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் கொரோனா மூன்றாவது அலை வரும் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். மேலும் கொரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலையையும் சந்திக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.