தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தொடக்கம்? பள்ளிகள் திறப்பதில் தாமதம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என தகவல் வெளி வந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன, இடையில் கொரோனா பரவல் குறைவாக உள்ள காரணத்தால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19 ல் வெளியீடு? புதிய தகவல்!
ஆன்லைன் மூலமாக பாடங்களை முழுமையாக நடத்த முடியாத நிலை காரணமாக விரைவில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்தும், ஜூலை 19 ஆம் தேதி வழங்கப்பட உள்ள தளர்வுகள் குறித்தும், இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜூலை 16 முதல் பள்ளிகள் 9 முதல் 12 வரை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் ஒரு வயதிற்கு உட்பட்ட 13 குழந்தைகள் என 19 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதே நிலைமை தமிழகத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை. இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமாக தன பள்ளிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா மூன்றாவது அலை பெரியவர்களைவிட சிறுவர், சிறுமிகளைத்தான் அதிகம் பாதிக்கும் என கூறப்படுகிறது. இதற்காகவே தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பில் தாமதம் ஏற்படுத்துகிறது.