சென்னையில் கொரோனா மூன்றாம் அலை தொடக்கம்? பொதுமக்கள் அச்சம்!
சென்னையில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் குழந்தைகள் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி விட்டது என்று பொதுமக்கள் இடையே அச்சம் நிலவுகிறது .
கொரோனா மூன்றாம் அலை:
தமிழகத்தில் கடந்த வருட மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி தினசரி தொற்று எண்ணிக்கை புதிய உச்சம் அடைந்தது வந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு தமிழகத்தில் 35 ஆயிரத்தை கடந்து சென்றது. கொரோனா இரண்டாம் அலை பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவலை தடுக்க அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) இழப்பு – விரிவான விளக்கம்!
இதனை தொடர்ந்து பூஞ்சை நோய்களும் அதிகளவில் பரவி வருகிறது. மேலும் கொரோனா மூன்றாம் அலை வரும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக அரசு கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது. 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. தற்போது உள்ள இரண்டாம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் தவித்து வரும் நிலையில் மூன்றாம் அலை பரவும் குழந்தைகளை தாக்கும் என பெருந்தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில், சென்னையில் கடந்த மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 19 வயதிலான சிறுவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு கொரோனா அதிகளவு பரவி வருகிறது. இதனால், சென்னையில் மூன்றாம் அலை தொடங்கி விட்டது என்ற அச்சம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும் மதுரையில் மூன்றாம் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிகளுக்கான வார்டுகள் தயாராகி கொண்டிருக்கிறது.