குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3வது அலை – பெற்றோர்களே உஷார்!!
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், மூன்றாம் அலை இன்னும் சிறிது நாட்களில் வர நேரிடலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். மூன்றாம் அலையின் காரணமாக 10 வயதிற்கு உட்பட்ட சிறியவர்கள் அதிகமாக பாதிப்படைவார்கள் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
கொரோனா பரவல்
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா என்ற நோய் பரவியது. இந்த கொடூர நோய் தாக்கத்தில் இருந்து தற்போது வரை எந்த நாடுகளும் மீளவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதுவே இப்படியாக இருக்க, கூடிய விரைவில் இதன் முன்றாவது அலை பரவ வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகின்றது. இந்த தாக்கம் தற்போது இருப்பதை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மே 17 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!
இந்த நோய் தாக்கத்தில் அனைவருக்கும் பாதிப்பு இருந்தாலும் குறிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தான் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் தாய்மார்கள் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் அவசியத்தினை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதே போல் அவர்களுக்கு தகுந்த கால இடைவெளியில் தடுப்பூசிகளை போட வேண்டும்.
0 – 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இந்த நோய் பாதிப்பினால் தாக்கப்பட்டால் அவர்களுக்கு காய்ச்சல், வாயுதொல்லை மற்றும் சளி போன்றவை ஆரம்பகட்ட அறிகுறிகள். இதனால் பெற்றவர்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்