கோவையில் கொரோனா 3ம் அலை – மாவட்ட கொரோனா தடுப்பு அலுவலர் தகவல்!
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும், அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா 3ம் அலை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவலாக பல மாவட்டங்களிலும் குறைந்து விட்டது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு தொடர்பான கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்களுடனும், அரசு அலுவலர்களுடனும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பினருடனும், வணிக சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இந்தியாவில் வெளிநாட்டினருக்கு கொரோனா தடுப்பூசி? – மத்திய அரசின் அதிரடி முடிவு!
ஆலோசனை கூட்டத்தில், கோவை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலரான அரசு முதன்மைச் செயலர் எம்.ஏ.சித்திக், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, மாவட்டத்தில் தினசரி 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் எதிர்ப்பு சக்தி மற்ற இடங்களை விட குறைவாக வெறும் 43% மட்டுமே உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா 3ம் அலையினால் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு 3ம் வழியில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் 124 ஆக்சிஜன் படுக்கைகள், 82 ஐசியூ படுக்கைகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 40 ஆக்சிஜன் படுக்கைகளும், 30 ஐசியூ படுக்கைகளும் தயாராக உள்ளன. மாவட்டத்தில் தேவையான மருத்துவர்கள் உள்ளனர். இருப்பினும், தேவைப்பட்டால் அடுத்த மாவட்டத்தில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்படுவார்கள். கோவையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக இருப்பதால், நிறைய உயிர்சேதம் இல்லாமல் 3-வது அலையை எதிர்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.