கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு முன்னெச்சரிக்கை – நிபுணர்களின் அறிவுரை!

0
கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு முன்னெச்சரிக்கை - நிபுணர்களின் அறிவுரை!
கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு முன்னெச்சரிக்கை - நிபுணர்களின் அறிவுரை!
கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு முன்னெச்சரிக்கை – நிபுணர்களின் அறிவுரை!

கொரோனா தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து 3 ம் அலை விரைவில் படையெடுக்கும் எனவும், இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 3ம் அலை தாக்காது என்றும் குறிப்பிடப்படுகிறது.

மூன்றாம் அலை:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் தொற்று பரவும் விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது கொரோனா நோய் பரவல் மூன்றாம் அலை என நிபுணர்களால் கூறப்படுகிறது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

இனி காலை 5 மணி வரை மட்டுமே மீன்கள் விற்பனைக்கு அனுமதி – புதிய நேர கட்டுப்பாடுகள்!

இம்மாத இறுதியில் கொரோனா 3ம் அலை தொடங்கியதாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார். இவ்வாறு தொடங்கும் கொரோனா 3ம் அலையானது அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் பெறும் எனவும் கணிக்கப்படுகிறது. ஆனால் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் முதல் மற்றும் இரண்டாம் அலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஒரு சதவீதமாக இருந்த நோய் எதிர்ப்பு சக்தி தற்போது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. 80 சதவீதம் பேருக்கு இந்த சக்தி உடலில் உருவாகி விட்டால் அடுத்தடுத்து அலைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 3வது அலையில் இது உயர்ந்து 30 சதவீத குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகினர். இதன் காரணமாக 3ம் அலையில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!