தமிழகத்தில் சிங்கங்களை அடுத்து, யானைகளுக்கு கொரோனா பரிசோதனை – அதிகாரிகள் நடவடிக்கை!

0
தமிழகத்தில் சிங்கங்களை அடுத்து, யானைகளுக்கு கொரோனா பரிசோதனை - அதிகாரிகள் நடவடிக்கை!
தமிழகத்தில் சிங்கங்களை அடுத்து, யானைகளுக்கு கொரோனா பரிசோதனை - அதிகாரிகள் நடவடிக்கை!
தமிழகத்தில் சிங்கங்களை அடுத்து, யானைகளுக்கு கொரோனா பரிசோதனை – அதிகாரிகள் நடவடிக்கை!

சென்னை வண்டலூரில் கொரோனாவால் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. இதை தொடர்ந்து முதுமலை காப்பகத்தில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. யானைகளின் சளி மாதிரிகளை வன உயிரியல் ஆய்வு மையத்திற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி தொற்று எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் எதிர்பாராத அளவு உயர்கிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக பூஞ்சை நோய்கள் படையெடுத்தது. அதற்கும் அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவுகிறது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பணியில் ‘திருப்தி’ – 84% பேர் ஆதரவு!

சில தினங்களுக்கு முன்பு சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அந்த சிங்கங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நீலா என்ற பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இது மேலும் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வனத்துறையினர் தொடர்ந்து சிங்கங்களின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். சிங்கங்கள் சோர்வாகவும், பசியின்மையாகவும் உள்ளன என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதனை தொடர்ந்து முதுமலை காப்பகத்தில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உத்தரவிட்டர். இதன் படி யானைகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர் ராஜேஷ் யானையின் தும்பிக்கையில் இருந்து சளி மாதிரிகளை சேகரித்துள்ளார். இவை உத்திரபிரதேசத்தில் உள்ள வன உயிரியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும் முதுமலையில் வனவிலங்குகளுக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!