ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் தற்போது வரை 80% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த கூடுதல் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் தொற்று பரவும் விகிதம் தீவிரமாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து தமிழகம் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு போலீசார் அதிரடி – ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் கடந்த 12 மற்றும் 19ம் தேதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 2.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 18 வயது நிரம்பிய 80% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறி வருகின்றன. அதனை தொடர்ந்து கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார். இருப்பினும் தமிழக அரசின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆண்டறிக்கை சமர்ப்பிக்காத சங்கங்களுக்கு எச்சரிக்கை – பதிவுத்துறை அதிரடி!

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக், மார்க்கெட்டுகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை கடை உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கியுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்கள் அனைவரும் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் எனவும், மொத்த விற்பனை மார்க்கெட்டுகளில் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்கள் கண்டறியப்படும் நிறுவனம், கடைகளுக்கு அபராதம் விதித்து 7 நாட்கள் வரை மூடப்படும் என ஆட்சியர் எச்சரித்து உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!