சென்னை வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா – ஊழியர்கள் அதிர்ச்சி!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 வயது பெண் சிங்கம் ஒன்று கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல நெருக்கமான உறவினர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மனிதர்கள் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூங்கா ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து வருகின்றனர். ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் முதல் விடுமுறை நாட்களிலும் RTGS சேவைகள் – RBI அறிவிப்பு!!
மேலும் இதே போல பூங்காவில் 11 சிங்கங்கள் பசியின்மை, சளி தொந்தரவு இருந்ததால் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சிங்கம் மட்டுமல்லாமல் குரங்கு போன்ற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மற்ற விலங்குகளையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.