தமிழகத்தில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா பரவல் – முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை முடிவுக்கு வந்தவுடன் சில மாதங்கள் மக்கள் சுதந்திரமாக தெருக்களில் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். கொரோனா பரவலை முற்றிலுமாக ஒழித்து விட்டோம் என எண்ணி கொண்டிருந்த சமயத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது அனைத்து மாவட்டங்களிலுமே கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்வு? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
இதனால் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லும்படியும், சமூக இடைவெளியை பொது இடங்களில் பின்பற்ற கோரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்கள் கட்டாயமாக இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் 100 க்கு கீழ் மட்டுமே கொரோனா பரவல் பதிவாகி வந்த நிலையில், நேற்று மட்டுமே தமிழகத்தில் 219 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கூட எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்று மக்கள் பீதியில் உள்ளனர்.