மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று, புதிய கட்டுப்பாடுகள் அமல்? மாநில அரசு நடவடிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறையத் தொடங்கியதும் அனைத்து மாநில அரசுகளும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. அதனை தொடர்ந்து கடைகள் வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை படிப்படியாக திறக்கப்பட்டது. மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை கொரோனா பரவக் கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இது நான்காம் அலை பரவலாக இருக்க கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் மற்ற மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் திங்கள்கிழமை 1,036 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனா பாதிப்பு சராசரி எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. ஓமைக்ரான் வைரஸ் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று கூறுகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 676 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு இந்த எண்ணிக்கை 60 -70% ஆக உள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மொத்த பாதிப்பில் மும்பையில் சராசரி 67.28 சதவீதமாக உள்ளது. அதனால் கொரோனா பரவல் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.