இந்தியாவில் ஏப்ரல் மத்தியில் கொரோனா உச்சம் அடையும் – விஞ்ஞானிகள் கணிப்பு!!
இந்தியாவில் கடந்த மாத முதல் கொரோனா நோய்த்தொற்று வேகமெடுத்து வருகிறது. தற்போது இது குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் கொரோனா பரவல் இந்த மாத மத்தியில் உச்சமடையும் என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் நாட்டை உலுக்கி வருகிறது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கின்றனர். மேலும் பலர் கொரோனா தொற்று காரணமாக தங்களது உயிரை இழந்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா தற்போது நாட்டில் கடந்த மாதம் முதல் வேகமெடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன் படி தற்போது நாட்டில் கொரோனாவின் 2வது அலை வேகமாக வீசி வருகிறது. இது குறித்து கான்பூர் IIT சேர்ந்த மனீந்தர் அகர்வால் கணிதவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி கொரோனா தொற்று பற்றிய கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா இந்த மாதம் 15 முதல் 20ம் தேதி வரை உச்சத்தை தொடும். பின்பு நாளடைவில் இதன் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து விடும்.
ஆதார் கார்டு முகவரி மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!!
அதன் படி அடுத்த மாத இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று தெரிவித்தார். ஏற்கனவே இதற்கு முன்பு கணிப்பை வெளியிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு குழுவும் இதேபோல் கருத்தை தான் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டும் இதேபோல் கணிதவியல் கோட்பாடு படி கணிப்பு செய்தனர் விஞ்ஞானிகள் கூறியதாவது, செப்டம்பரில் கொரோனா அதிகரித்து பிப்ரவரியில் குறைந்து விடும் என்று தெரிவித்தனர். அது போன்ற நிலை தான் இந்தியாவிலும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.