இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு புதிய உச்சம் – பலி எண்ணிக்கை உயர்வு!!

0
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு புதிய உச்சம் - பலி எண்ணிக்கை உயர்வு!!
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு புதிய உச்சம் – பலி எண்ணிக்கை உயர்வு!!

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு:

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கு காலத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் ஊரடங்கிற்கு பின்னால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது. இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் நாடு முழுவதும் பரவி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இரண்டால் அலையில் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றினால் 3,66,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,747 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை நாடு முழுவதும் தொற்றினால் 2,26,62,000 பேர் பாதிக்கப்பட்டும் 2,46,000 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2000 நிவாரண நிதி – இன்று முதல் வழங்கல்!!

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு பிறகு இறப்பு எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. உயிரிழப்பவர்களின் முதல் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவில் மட்டும் தினசரி பலி அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் நேற்று மட்டும் 47,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மே 7, 8ம் தேதிகளில் பலி எண்ணிக்கை தொடர்ந்து 4,000 என்று கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!