இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்? மத்திய அரசின் அறிவுறுத்தல்!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பிறகு அரசின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தொற்று முழுவதும் கட்டுக்குள் கொண்டு வர மிகவும் உதவியாக இருந்தது. இதன் காரணமாக மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா பிளஸ் வைரஸ் முதல் அலையை விட மிக தீவிரமாக பரவத் தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரம்? மத்திய அரசு அறிவுரை!
அந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ தொடங்கியது. இந்த நிலையில் கட்டாய முகக்கவசம், அனைவருக்கும் தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகளால் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், என அனைத்தும் செயல்படத் தொடங்கின. இதை தவிர போக்குவரத்து, தனியார் நிறுவனங்கள், அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் போன்றவைகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் தற்போது நோய் பரவல் அதிகரிப்பது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கொரோனா நான்காம் அலை உருவாகும் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் பண்டிகைகள் அதிகமாக வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துமாறு தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.