மீண்டும் வேகமெடுத்த கொரோனா பரவல் – ஊரடங்கு அமல்! காரணம் இது தான்!

0
மீண்டும் வேகமெடுத்த கொரோனா பரவல் - ஊரடங்கு அமல்! காரணம் இது தான்!
மீண்டும் வேகமெடுத்த கொரோனா பரவல் - ஊரடங்கு அமல்! காரணம் இது தான்!
மீண்டும் வேகமெடுத்த கொரோனா பரவல் – ஊரடங்கு அமல்! காரணம் இது தான்!

சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய நகரமான பெய்ஜிங்கில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் அங்குள்ள ஹெவன் சூப்பர் மார்க்கெட் பார் தான் என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவல்:

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவ தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது.

தனியார் பள்ளி வாகனங்களில் புதிய வசதி? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

இதன் காரணமாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தது. அதனால் அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்நாட்டு தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அதற்கு காரணம் அங்குள்ள ஹெவன் சூப்பர் மார்க்கெட் பார் தான் என்கின்றனர். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட 61 புதிய கொரோனா நோயாளிகள் ஹெவன் சூப்பர் மார்க்கெட் பார்க்கு சென்றுள்ளனர்.

Exams Daily Mobile App Download

அந்த குறிப்பிட்ட பாருக்கு அதிகளவில் மக்கள் சென்று வருவதால் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த குறிப்பிட்ட பாரில் இருந்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல ஷாங்காய் நகரிலும் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.2 வாரங்களுக்கு முன்பு தான், சீனா கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தி அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!