தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமல்! முதல்வரின் முடிவு இது தான்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க குறித்து, முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்களும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்தனர். ஒரு வழியாக நாம் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 253 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 500-ஐ தாண்டி உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது நான்காம் அலையின் தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை பரவும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு துறையில் அக்னிபாத் வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு – அறிவிப்பு வெளியீடு!
இந்தக் கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. நடைபெற போகும் கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், தடுப்பூசிகள் செலுத்துதல், ஊரடங்கு அமல்படுத்துதல், கட்டுப்பாடுகளை அறிவித்தல் போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று கணிக்கப்படுகிறது.