தீவிரம் காட்டும் கொரோனா, நெருங்கும் பண்டிகை காலம் – மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்!
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் மாதங்கள் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது
தீவிரம் காட்டும் கொரோனா:
இந்தியாவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 17 ஆயிரம் எண்ணிக்கைக்கு கூடுதலாக பதிவாகி வருகிறது. நாடு முழுவதும் பரிசோதனை முடிவில், கடந்த 24 மணி நேரத்தில் 19,406 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,41,26,994ஆக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5,26,649 ஆக அதிகரித்திருப்பதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு? பொதுமக்கள் கருத்து பதிவு செய்ய கூட்டம்!
தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்று உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் என்றும் பின்னர் பி.ஏ. வகை என தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. தமிழகம், கேரளம் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது நாட்டில் கொரோனா பரவலின் வேகம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. எனவே பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளான மாஸ்க் அணிதல் சமூக இடைவெளி போன்றவைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதையடுத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் விரைவாக வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் தொடர்ந்து பண்டிகைகள் வர உள்ளதால் மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.