வீட்டில் தனிமைபடுத்திக் கொள்பவரா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

0
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்பவரா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்பவரா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!
வீட்டில் தனிமைபடுத்திக் கொள்பவரா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்போது சுகாதாரத்துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்

தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மிக அதிகமாகி வருகின்றது. அந்த வகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நோயாளி பின்பற்ற வேண்டியவை,

  • குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். வீட்டில் தனி அறையில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவர் இடத்திலும் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் அவசியம்.
  • கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்கள் உபோயோகிக்கும் பாத்திரங்கள், உடைகள் மற்றும் பொருட்களை உபோயோகிப்பதை தவிர்த்தல் மிக மிக அவசியம்.
  • மனதினை எப்போதும் பாசிட்டிவாக வைத்திருத்தல் வேண்டும். இருமல் மற்றும் சளியை கட்டுப்படுத்தும் மருந்து மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையோடு உட்கொள்ளுதல் அவசியம்.
  • வீட்டில் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி மற்றும் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கும் ஆக்சிமீட்டர் கருவி உதவியுடன் உடல் நிலையினை சரி பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.
  • மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சல் தீவிரமடைந்தலோ, சளி, வறட்டு இருமல் அதிகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
  • மூன்றடுக்கு கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்சத்து அதிகமாக உள்ள திரவங்களை பருக வேண்டும்.

பராமரிப்பாளர்கள் பின்பற்றவேண்டியவை,

  • பராமரிப்பாளர்கள் முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம். அதே போல் நோயாளி தொடும் பகுதிகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • அவர்களிடம் இருந்து எப்போது சற்று விலகியே இருக்க வேண்டும். அவரிடம் இருந்து விட்டு மற்றவற்றவர்களிடம் வரும் போது கை, கால்களை முறையாக சானிடைசர் போட்டு நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  • முகக்கவசத்தின் முன் பகுதியினை தொடக் கூடாது.
  • நோயாளி பயன்படுத்திய பாத்திரங்கள், பொருட்கள் ஆகியவற்றை கையுறை அணிந்து கொண்டு தான் பயன்படுத்த வேண்டும்.

இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வந்தால் கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் மீளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!