இந்திய தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – முழு ஊரடங்கு அமல்?
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்திருக்கிறது. அதிலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.
மீண்டும் ஊரடங்கு:
உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அரசும் மக்களின் நலனில் கருத்தில் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மே 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!
இதுமட்டுமல்லாமல் மக்கள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் இந்தியாவில் படிப்படியாக தொற்று குறைய ஆரம்பித்தது. ஆனால், மீண்டும் இந்தியாவில் சில இடங்களில் கொரோனா பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 நாட்களுக்கு பிறகு தற்போது தான் கொரோனா உயர்ந்து வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த வாரத்தில் மட்டுமே கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.5 சதவீதத்தில் இருந்து 2.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர். வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.