மீண்டும் அமலுக்கு வரும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் – மாநில அரசு நடவடிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் கணிசமான உயர்ந்து வரும் நிலையில் தொற்றுநோயின் நான்காவது அலையை கருத்தில் கொண்டு மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகள்
கடந்த ஒரு மாதத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கிய பிறகு, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசு மீண்டும் முகக்கவசங்களை பயன்படுத்தவும், கொரோனா தொற்றுநோயின் நான்காவது அலையைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி இருக்கிறது. அந்த வகையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகளுக்கு மத்தியில், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போடுவது குறித்த வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு!
அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்ததன் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் நேற்று (ஏப்ரல்.28) இரண்டாவது நாளாக 100 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு, கோட்ட ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இது குறித்து அவர் கூறுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொற்று பரவுவதை வீட்டு வாசலில் இருக்கும்போது நாம் தடுக்க வேண்டும். அதனால் கூட்டத்தில் இருக்கும் போதும், நெரிசலான இடங்களிலும் முகக்கவசங்களை பயன்படுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மகாராஷ்டிராவில் கடந்த ஏப்ரல்.27ம் தேதியன்று 186 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக மும்பையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி வந்தாலும் தொற்றுநோய் தொடர்பான இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.