கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அமல் – அரசு திட்டம்!
சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் தீவிரமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பழையபடி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளனர்.
கொரோனா பரவல்:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டு தவணையாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வந்தது. இதனையும் மீறி பல நாடுகளில் தொற்று பரவிக் கொண்டு தான் இருக்கிறது. இதனால் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை!
இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. வெளிநாடுகளிலும் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்த வேளையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள் வசித்து வாழும் ஹாங்காங் நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கபட்டன. கொரோனா பரவல் காரணமாக பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்துதான் வேலை பார்த்து வந்தனர்.
Exams Daily Mobile App Download
தற்போது தலைநகர் பெய்ஜிங், ஃபாங்ஷான் மற்றும் ஷுனி போன்ற மாவட்டங்களில் கொரோனா குறைந்துள்ள வேளையில் மறுபடியும் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல தயாராக இருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் சில கொரோனா தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஜிம்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரங்களில் உணவக சாப்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதியின்றி சாலைகளில் தனியார் கார்கள் செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இந்த கட்டுப்பாடுகளை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.