தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தை பார்ப்போம்.

கொரோனா கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

அதன்படி தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!

இவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் போது சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். மேலும் அரசு ஒவ்வொரு மருத்துவமனையிலும் 200 முதல் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பில்லை. மேலும் கொரோனாவால் உயிரிழப்புகள் குறைவாக ஏற்படுகிறது. ஆதலால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!