தமிழகத்தில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் சொன்ன தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் சிக்கி தவித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதனால் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். கொரோனாவின் மூன்று அலைகளின் தாக்கத்தில் ஏகப்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கொரோனாவின் நான்காம் அலை தாக்கம் ஜூன் மாதங்களில் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதன் படி சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதனால் மக்கள் சற்று அச்சத்தில் இருக்கின்றனர். அரசு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மொத்த ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை எண்ணிக்கையில், 10 சதவீதத்துக்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தாலோ, மருத்துவமனையில் 40 சதவீதத்துக்கு மேல் அனுமதி இருந்தாலோ, கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் அந்த சூழல் ஏற்படவில்லை. அந்த நிலைமை வந்த பின் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக ‘பூஸ்டர் டோஸ்’ போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாம் தவணை செலுத்தியவர்கள் 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.