தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கம்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துகொண்டே வருவதால் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. கொரோனாவிற்கு பல உயிர்களும் பலியாயின. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்லக் கூடாது எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் 2 வாரங்களுக்கு ஏப்ரல் 19 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் முடிவு!
கொரோனாவினால் அதிக அளவில் பாதிப்படைந்த மகாராஷ்டிரா மாநிலமே கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தியுள்ளது. அதாவது, நாளையில் இருந்து பொது மக்கள் யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமோ என மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை!
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்தோசித்த பின்னரே முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடுகளான சீனா முதலிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்த வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது.