சென்னையில் தீவிரமடையும் கொரோனா கட்டுப்பாடுகள் – மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்திருப்பினும் சென்னை மாநகரத்தில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது குறைந்துள்ளதால், முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கடைவீதிகளில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருவதால், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க சென்னை மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டம் – ரூ.999 பேக்!
இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவானது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள், பிற கடைகள் அனைத்திலும் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றும் உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா எனவும் அந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதையும் அக்குழு கண்காணித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை கடை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு கடைகளின் நுழைவு வாயில்களிலும் சானிடைசர்கள் உள்ளிட்ட கை சுத்திகரிப்பான்களை வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்ததற்கு பின்பு தான் கடைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு ஆய்வு செய்கையில், இந்த கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீது 1897 பிரிவு 2 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.