பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் – பள்ளிகல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய அமைச்சர் கொரோனா பரவலை தடுக்க தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் மத்திய அரசு உத்தரவிற்கிணங்க தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அண்மையில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகைகளும் நடைபெற்றது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது குறித்து இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார துறையின் கருத்தை கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொரோனா தொற்றிலிருந்து காக்க சுகாதாரத்துறை மற்றும் அரசின் அறிவுறுத்தல் படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.