சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் – பொதுமக்கள் கவனத்திற்கு!
சென்னை கோயம்பேட்டில் பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மார்க்கெட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கொரோனா விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
கொரோனா விழிப்புணர்வு
கோயம்பேடு மார்க்கெட் காவலாளிக்கு வாக்கி டாக்கி கொடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் மும்மொழித் திட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறியிருக்கின்றனர்.கொரோனா விதிமுறைகள் மீறும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டைப் போல கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மக்களுக்கு ஒரு அளவு கூட கொரோனா வைரஸ் பரவ விடக் கூடாது என்பதையும் அங்காடி நிர்வாக அதிகாரிகள் மிக கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இதை செய்யாவிடில் இரட்டிப்பு அபராதம்!
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சிறிய கிளினிக்கில் கடந்தாண்டு மார்ச் முதல் இது நாள் வரை கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த இன்று முதல் அங்காடி நிர்வாக முதன்மை சாந்தி தலைமையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் முக கவசம் அணிய வேண்டும் என்றும், உங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம் என்று ஒலிபெருக்கியில் கூறியிருந்தார்.
ExamsDaily Mobile App Download
கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்காதவர்கள் மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, வியாபாரிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார். அதன்படி ,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் சோதனை செய்த பின்னர் மார்க்கெட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார்.