ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா வழிகாட்டுதல்கள் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - கொரோனா வழிகாட்டுதல்கள் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - கொரோனா வழிகாட்டுதல்கள் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – கொரோனா வழிகாட்டுதல்கள் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் நிலையம்:

தமிழகத்தில் கடந்த வருடம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக ரயில்வே துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அரசின் ஊரடங்கு கட்டுப்பட்டால் ரயில்களில் பயணிகள் வருகை குறைந்தது. மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்வதற்கும் வெளி மாநிலங்கள் செல்வதற்கும் அரசு இ – பதிவை கட்டாயப்படுத்தியது. இதனால் பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். இந்த பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

தமிழக அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு – அறிவிப்பு வெளியீடு!

இதனால் ரயில்வே துறை நஷ்டத்தை சந்தித்தது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பயணிகள் வசதிக்காக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அரசு தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்தது.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசாணை வெளியீடு!

அதன்படி ரயில்களில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்களில் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையங்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியது. தற்போது முழுமையாக குறையாத நிலையில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலைய வளாகத்திலும், ரயில்களிலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!