தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் – ‘கன்ட்ரோல் ரூம்’ மீண்டும் திறப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 1000 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகிறது. அதனால் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் கன்ட்ரோல் ரூம் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசமின்றி இருப்பவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தொடர்ச்சியாக இன்றும் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டி பதிவாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் இதில் சென்னை, செங்கல்பட்டில், திருவள்ளுவர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் இதுவரை 2.30 கோடி ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு – ரூ. 70,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் கொரோனா முதல், இரண்டாவது, மூன்றாவது அலை பரவிய சமயத்தில் மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுப்பாட்டு அறை என்ற கன்ட்ரோல் ரூம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422 2300132, 0422 2302323 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு நாள்தோறும் தொடர்பு கொண்டு சிகிச்சை, ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து கட்டுப்பாட்டு அறை கேட்டறியும் என்று கன்ட்ரோல் ரூம் பொறுப்பாளர் முகுந்தன் தெரிவித்துள்ளார்.