தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.69 கோடி வசூல் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு நிதி பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 17 ஆம் தேதி வரை ரூ.69 கோடி பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக முதல்வர் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு நிதி பற்றாக்குறை உள்ள காரணத்தினால் அதனை சரி செய்ய ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையின் படி பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் தங்களால் முடிந்த தொகையை வழங்கினார்கள்.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இந்நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, கொரோனா நிவாரண நிதியாக ரூ.69 கோடி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக ரூ.29.44 கோடியும் நேரில் ரூ.39.56 கோடி நிதியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக 50 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.