தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா – தடுப்பூசி செலுத்த ஆர்வம் குறைவு! கவலையில் அதிகாரிகள்!

0
தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா - தடுப்பூசி செலுத்த ஆர்வம் குறைவு! கவலையில் அதிகாரிகள்!
தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா - தடுப்பூசி செலுத்த ஆர்வம் குறைவு! கவலையில் அதிகாரிகள்!
தமிழகத்தில் மீண்டும் பரவும் கொரோனா – தடுப்பூசி செலுத்த ஆர்வம் குறைவு! கவலையில் அதிகாரிகள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்பவர்களின் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. அதனால் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் ஜூன் மாதத்தில் கொரோனாவின் 4ம் அலையின் தாக்கம் பரவ தொடங்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஈஸியாக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

அதன்படி தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறி செயல்படுவோருக்கு ரூ.500 அபராதமாக செலுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக உள்ளது. அத்துடன் உயிரிழப்பும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் தமிழகத்தில் தற்போது ஒரு நாள் பாதிப்பு 600க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளது அதிகாரிகளை கவலையில் ஆழ்த்துகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!