மீண்டும் பரவி வரும் கொரோனா – ஊரடங்கு உத்தரவு அமல்! அரசு அதிரடி!
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்புகள் வேகமெடுத்து வருகிறது. அதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தது. அதனால் அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.
Exams Daily Mobile App Download
மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களில் அதிகபட்சமாக பிஜீங்கில் நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தடுப்பு பணியாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
ரயில்களில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு – ரயில்வே துறையின் புதிய அறிவிப்பு!
மேலும் அப்பகுதியில் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி, பள்ளிகள் போன்றவற்றை மறுஉத்தரவு வரும் வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. தலைநகர் பீஜிங்கில் உள்ள ள ஹெவன் சூப்பர் மார்க்கெட் பார் தான் கொரோனா பரவலுக்கு கரணம் என்று கூறுகின்றனர். அந்த குறிப்பிட்ட பாரில் இருந்து 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.