தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – சுகாதாரத்துறை செயலர்!
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை மாநில சராசரியை விட அதிகமாக இருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 2,000 ஆக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஓரிரு வாரங்களாக தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் ஏறுமுகத்தில் இருக்கிறது. அதிகரிக்கும் தொற்று பாதிப்புகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
TNPSC துறைத் தேர்வுகளில் சர்வர் கோளாறு – குழப்பத்தில் தேர்வர்கள்!
மேலும் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100 க்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோயம்புத்தூரில் 2% தஞ்சாவூரில் 2%, அரியலூரில் 1.9% என 18 மாவட்டங்களில் மாநில சராசரியை விட தொற்று விகிதம் அதிகமாக இருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 2,000 ஆக உள்ளது என்றும் கூறியுள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதால் அந்த பகுதிகளில் தொற்று அதிகமாகிறது என்று கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது குழந்தைகளை தாக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதனால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டெல்டா வகை வைரஸ் விரைவாக பரவி வருவதால் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வரை 1.97 கோடி பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொண்டுள்ளனர். இரண்டாம் தவணையை 47 லட்சம் பேர் தான் செலுத்தியுள்ளனர் என்றும் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.