தமிழக அரசு பேருந்து பயணிகள் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்!
தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் பலர் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பயணம் செய்தால் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. பலர் தங்களுக்கு நெருக்கமான உறவுகளை இழந்துள்ளனர். இதனால் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
பாக்கியா ஸ்கூட்டி ஓட்டுவதை பார்த்து விடும் மாமனார்? செழியன் மீது கோபப்படும் கோபி!
அதனால் அரசு பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 19 வரை நீட்டித்துள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து பேருந்துகளிலும் கூட்ட நெரிசலுடன் பயணிகள் பயணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அப்போது அரசு பேருந்து ஒன்றில் பயணிகள் முகக்கவசம் அணியாமலும், பயணம் செய்துள்ளனர். உடனே சுகாதாரத்துறை ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், காவல்துறையினர் அந்த பேருந்தை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதற்கு பல பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் பயணிகளிடம் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் பயணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. மேலும் அதிகமாக பயணிகளை ஏற்றி பயணம் செய்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.