தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் – முக்கிய கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஏப்ரல் மாதம் வரை குறைவாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு எவ்வாறு எடுத்துள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் வேகமெடுத்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக தினசரி பாதிப்பு 1000யை கடந்து பதிவாகி வருகிறது. கொரோனாவின் உருமாறிய ஓமிக்ரானின் பிஏ.5, பிஏ.2.38 வகை வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதனால் தான் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பொது இடங்களான சந்தைகள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் 26 சதவீதம் பேரால் கொரோனா பரவல் ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதே போல அலுவலகங்கள், பணியிடங்களிலிருந்து 18 சதவீதம் பேருக்கும், பயணத்தின் போது 6 சதவீதம் பேருக்கும், கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருவதால் 12 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வருவாய்த்துறை, காவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகள் இந்த இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா என கண்காணிக்க ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் – ‘கன்ட்ரோல் ரூம்’ மீண்டும் திறப்பு!
அலுவலகங்களுக்கு பணிக்கு வருவோருக்கு தினமும் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு வந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவர்களை பரிசோதனைக்கோ அல்லது சிகிச்சை செய்து கொள்ள அனுப்ப வேண்டும். மேலும் எல்லா இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணி செய்யும் அறைகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும். அதனால் கொரோனா தொற்று பரவுவது குறையும்.
மேலும் கொரோனா விழிப்புணர்வு குறித்து வத்திராயிருப்பின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு மாஸ்க் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், ஒஎபி தாசில்தார் சின்னத்துரை, வருவாய் துறை ஆய்வாளர்கள் பவுன்செல்வி, சிவராமசுப்பிரமணியன் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா, சரவணக்குமார் லோகேஸ், ஆனந்த் ஆகியோர் மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு மாஸ்க் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் இன்று முதல் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்