இந்தியாவில் ஏப்ரல் 10 & 11 தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை – மத்திய அரசு ஏற்பாடு!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10, 11 தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பல வகையான வைரஸ் பரவி வருகிறது. அதில் கொரோனாவும் அதிகளவில் பரவுகிறது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதால் அந்த அளவிற்கு பாதிப்பு இல்லை என்றாலும், மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
அதிகரிக்கும் இன்ஃபுளுயன்சா பாதிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசு தகவல்!
இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் வருகிற ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்பட இருக்கிறது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Exams Daily Mobile App Download