கவலையில் தமிழக மக்கள்.. பொங்கல் பண்டிகைக்கு எழுந்த சிக்கல்.. கொரோனா எதிரொலி!
இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. ஆனால் அதிகரிக்கும் கொரோனா பரவலால் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை வழக்கம் போல கொண்டாடப்பட அரசு அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொங்கல்:
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக மாநிலம் விழா கோலம் பூண்டு களைகட்டும். கடந்த 2020,2021ம் காலக்கட்டத்தில் பெரிதாக பொங்கல் பண்டிகை நிகழ்ச்சிகள் கடைபிக்கப்படவில்லை. ஏனென்றால் அப்பொழுது கொரோனா காலமாக இருந்தது. பின்னர் 2022ம் ஆண்டு வழக்கம் போல சிறப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் BF.7 வைரஸ் பாதிப்பு? சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக குஜராத்தில் கொரோனாவின் வீரியமிக்க XBB.1.5 திரிபு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸினால் தான் அமெரிக்காவில் தற்போது நோய் பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் 16 பேருக்கு பரவும் வீரியமிக்க வைரஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இப்போதில் இருந்தே பின்பற்ற ஒவ்வொரு மாநில அரசையும் அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதே சென்னையில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் வர இருக்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.