கொரோனா நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்துதலில் செய்ய வேண்டியது – மருத்துவர்கள் அறிவுரை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக உள்ளவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய காட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் 1.05 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அனுமதி வழங்காமல் உள்ளனர். இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டும், பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கடந்த ஆண்டை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் இரண்டாம் அலை தாக்கத்தில் பாதிக்கப்படுவர்களில் ஐந்தில், நால்வருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகிறது. இதனால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் மே மாதம் கொரோனா உச்சம் பெறும் – விஞ்ஞானிகள் தகவல்!!
ஆனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நாள்பட்ட சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உடையவர்கள் மருத்துவர்கள் அறிவுரையின் படி தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். வீடுகளில் தனி அறை, கழிப்பறை வசதி கட்டாயம் இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளாக முககவசம் அணிதல், கிருமிநாசினி போன்றவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
முகக்கவசங்களை ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பல்ஸ், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் இரண்டு முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.