தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல்? செயலாளர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனா:
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் இருந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. இந்த வைரஸ் எதிர்பாராத அளவு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் பரவலால் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐ தாண்டி சென்றது. அதே அளவு உயிரிழப்புகளும் அதிகமானது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அரசு தடுப்பு பணியாக மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியது. கல்வி நிறுவனங்கள், திரையரங்கு, வணிக வளாகங்கள் போன்றவைகள் இயங்க தடை விதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடங்கியது. கட்டாயம் 18 வயதிற்கு மேற்பட்டோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி ஆக வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்து வரும் நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தாக்கத் தொடங்கியது. அரசின் முயற்சியால் இதனையும் கட்டுப்படுத்தி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் கண்காணிப்பை அதிகப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருந்தாலும் மக்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.