‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ் மாறுபாட்டின் அறிகுறிகள் என்னென்ன? மருத்துவர்கள் விளக்கம்!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடாக ஓமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ்:
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கு வேகமாக பரவ தொடங்கி உலக நாடுகளேயே அச்சுறுத்தியுள்ளது. நோய் தடுப்பு பணியாக வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தபட்டு, அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரசானது உருமாற்றம் அடைந்து அடுத்த நிலைகளை அடைந்தது. இந்த வீரியம் மிகுந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தியது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் அச்சுறுத்தல்! தலைமை செயலர் ஆலோசனை!
குறிப்பாக டெல்டா பிளஸ் வகை வைரஸ் இந்தியாவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று அடுத்த தாக்குதல்களை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக கொரோனா தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்கிறது.
தமிழகத்தில் நாளை (நவ.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் அடுத்ததாக கொரோனா வைரஸின் புதிய வடிவமான ஓமிக்ரான் வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவு சோர்வு, தசை வலி, கரகரப்பு தொண்டை, வறட்டு இருமல் ஆகிய அறிகுறிகள் தென்படுவதாக தென்னாப்பிரிக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாதிப்புகள் லேசானது. இதற்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல அவசியம் ஏற்படவில்லை என்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.