நீலகிரி செல்வோருக்கு ‘இந்த’ சான்றிதழ் கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் சுற்றுலாத்தலமான நீலகிரி பகுதிக்கு செல்ல 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் செல்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் கட்டணமில்லா கல்வி ஆண்டு – முதல்வருக்கு மனு!
சுற்றுலா தலமான நீலகிரிக்கு வரும் மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருக்க வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான ஆவணம் இருந்தால் மட்டுமே அவர் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியுள்ளார். தடுப்பூசி போடாதவர்கள் 72 மணி நேரத்திற்குள்ளான கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தை குறைப்பதற்கான இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
அதே போல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர போன்ற மாநிலங்களிலும் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னர் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார். நீலகிரிக்கு வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.