தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி – மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமெடுத்து வரும் நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணி காரணமாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு அதிகாரிகள்:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை அதிக அளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக நேற்று (ஏப்ரல் 8) தமிழகத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று (ஏப்ரல் 8) மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழாவை நடத்த அறிவுறுத்தினார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு சுமார் நான்காயிரம் வரை இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மிக தீவிரமாக செய்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தமிழக தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!!
அவர் கூறியதாவது, கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவது, அதிகளவில் பரிசோதனை மேற்கொண்டு அதற்கு விரைவில் முடிவு வழங்குவது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு கிடைக்கிறதா என்றும், முகக்கவசம், பாதுகாப்பு கவசம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறதா என்றும், மூச்சு திணறல், காய்ச்சல் ஏற்பட்டவர்களை கண்டறிவதும் மற்றும் மருத்துவம் முறையாக வழங்கப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.