மே 24 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு திட்டம்!!

0
மே 24 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு திட்டம்!!
மே 24 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு திட்டம்!!
மே 24 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு திட்டம்!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வரும் காரணத்தினால் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 24 வரை நீடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 15,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 312 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,96,628 ஆக உயர்ந்துள்ளது. அதே போல இறப்பு எண்ணிக்கை 16,958 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில அரசு முழு ஊரடங்கை மே 24 ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டவை & அனுமதிக்கப்படாதவை:
  • அத்தியாவசிய மற்றும் மருத்துவ அவசர சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன.
  • அனைத்து கடைகளும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
  • தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன .
  • உணவகங்கள், பார்கள், விளையாட்டு வளாகங்கள், ஜிம்கள் மூடப்பட்டுள்ளன.
  • பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!