மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!
தீவு நாடான சமோரியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் நடவடிக்கையாக அந்நாட்டில் மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு:
சீனாவின் உஹான் நகரில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நாட்டு அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கு பரவியது. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்களை வழங்கியது.
மீண்டும் ரெட் அலர்ட் & முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் கொரோனா பரவல்!
அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கபட்டு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது. இதனால் மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்றில் இருந்து பாதுகாத்தது. தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டு வந்ததால் கொரோனா பரவல் இறங்கு முகத்தை சந்தித்தது. அதனால் மக்களும் இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பினர். இந்த நேரத்தில் தீவு நாடான சமேரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் , 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 நபர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் விதிக்கப்பட்ட ஊரடங்கை மே 17 வரை நீட்டித்து அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்நாட்டில் 92.6% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே சர்வதேச விமானங்களில் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.