இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!

0
இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் - ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் - ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!
இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!

ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் டெல்டா வைரஸ் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

முழு ஊரடங்கு

ஆஸ்திரேலியா நாடு முழுவதும் கொரோனா டெல்டா வகை வைரஸ் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் அரசு, இன்று (ஆகஸ்ட் 9) முதல் கிராமப்புறம் மற்றும் பைரன் விரிகுடாவின் கடலோரப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட வடக்கு முனை பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று அச்சப்பட்ட அரசு இவ்வகை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – உயர்கல்வித்துறை எச்சரிக்கை!

அந்த வகையில் சிட்னியின் வடமேற்கில் 414 கிமீ தொலைவில் அமைந்துள்ள விவசாய நகரமான டாம்வொர்த் மற்றும் சிட்னிக்கு வடக்கே 770 கிமீ தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான பைரன் பே ஆகிய இரண்டு பகுதிகளும் ஏழு நாள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியுள்ளார். இதனிடையே நியூ சவுத் வேல்ஸில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 283 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் டாம்வொர்த், பைரன் பே பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் பயணத் தடைகளை மீறி அங்கு சென்றுள்ளதால் நோய் தொற்றுக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் அப்பகுதிகளில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிட்னி நகரானது இப்போது ஏழாவது வார பொது முடக்கத்தில் இருக்கின்ற போதிலும், டெல்டா வகை வைரஸ் பாதிப்புகள் எழுச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. தவிர மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 12 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் நேற்று (ஆகஸ்ட் 8) ஒரு நாளில் 36,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்தாகவும், 939 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!