செப்டம்பர் 6 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி!

0
செப்டம்பர் 6 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி!
செப்டம்பர் 6 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி!
செப்டம்பர் 6 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி!

கோவா மாநிலம் முழுவதும் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று (ஆகஸ்ட் 30) முதல் அமலுக்கு வருகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு

கோவா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் 9 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நோய் பரவல் தாக்கமானது வெகுவாக குறைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு வகையிலான தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய் பரவல் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு தொடர்பிலான கட்டுப்பாடுகளை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

பாரதியார் பல்கலை அரியர் மாணவர்களுக்கு நேரடி தேர்வு – அறிவிப்பு வெளியீடு!

அந்த வகையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் சில செயல்பாடுகளுக்கு அரசு கூடுதல் அனுமதி கொடுத்துள்ளது. அதன் கீழ் கோவா மாநில அரசு ஏற்கனவே பெரும்பான்மையான செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுத்திருக்கும் நிலையில், கேசினோக்களை திறக்க தடை விதித்துள்ளது. தற்போது கோவா மாநிலத்தில் நீடிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் அனுமதிக்கப்படுள்ள தளர்வுகளை பொருத்தளவு,

  • கேசினோக்கள், ஆடிட்டோரியங்கள், சமூக அரங்குகள், நீர் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • ஆற்றில் பயணம் செய்வதற்கு அனுமதி இல்லை.
  • ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • 50% திறன் கொண்ட சினிமா அரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
    பள்ளிகள் மூடப்படும்.
  • இருப்பினும், பள்ளித் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளை அரசின் ஒப்புதலுடன் நடத்த அனுமதிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சாரம், திருமணம் மற்றும் பிற கூட்டங்கள் அனைத்தும் 50% திறனுடன் அரங்கத்தினுள் நடத்த அனுமதிக்கப்படும்.
  • பார்கள் மற்றும் உணவகங்கள் 50% திறனுடன் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படலாம்.
  • உட்புற ஜிம்கள் 50 சதவீத திறனில் செயல்படலாம்.
  • விளையாட்டு வளாகங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

இதற்கிடையில், கோவாவில் நேற்று (ஆகஸ்ட் 30) ஒரு நாளில் 74 புதிய வழக்குகள் மற்றும் 2 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!