கொரோனாவுக்கு 36 பேர் பலி, ஏப்.26 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!

0
கொரோனாவுக்கு 36 பேர் பலி, ஏப்.26 வரை ஊரடங்கு நீட்டிப்பு - அரசின் அதிரடி உத்தரவு!
கொரோனாவுக்கு 36 பேர் பலி, ஏப்.26 வரை ஊரடங்கு நீட்டிப்பு - அரசின் அதிரடி உத்தரவு!
கொரோனாவுக்கு 36 பேர் பலி, ஏப்.26 வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!

சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, முழு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 26 வரை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசு திணறி வருகிறது. சீனாவில் தற்போது பதிவாகி வரும் பாதிப்பு எண்ணிக்கை, உலக அளவில் குறைவானதாக இருந்தாலும், 2019 ல் ஏற்பட்ட முதல் வார பாதிப்பை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு நீட்டிப்பு:

கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீன அரசு ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கையை கடைபிடித்து வருவதால், ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி விடுகிறது. சாங்சுன், ஜலின் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து அங்கு முழு ஊரடங்கை பிறப்பித்து சீன அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சீனாவின் மற்றொரு பெரிய நகரமான, ஷாங்காயில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து, இரண்டு கட்டங்களாக, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

ExamsDaily Mobile App Download

ஷாங்காயில் நகரில் நாளுக்கு நாள் தாக்கம் அதிகரிப்பதால் மேலும், ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டித்து, சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளதாவது தீவிரமாக பரவும் ஒமைக்ரான் வகை கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு தொற்று பரவியுள்ளது. அவற்றில் ஷாங்காயில் 1,931 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் இதுவரை ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 4,43,500 ஆக உள்ளது. மேலும் நோய்த் தொற்றுக்கு இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். இந்த வகையில் ஷாங்காயில் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,674 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதித்த 30,813 பேர் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா? பயத்தில் நடுங்கும் முல்லை – சீரியலில் புதிய திருப்பம்!

இதையடுத்து, ஷாங்காய் நகரம் முழுவதும் ஏப்ரல் 26 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைப் பிரதமர் சன் சுன்லன், நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நோய்த்தொற்றின் அபாயத்தைப் பொறுத்து கூடுதல் சோதனைகள் நடத்தப்படும். கொரோனா தொற்றை முழுவதுமாக ஒழிப்பதற்காக முழு முயற்சிகள் அனைத்தும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக, பொது போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீனாவில் பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனா தினசரி பாதிப்பில், ஷாங்காய் நகரில் 70 சதவீதம் பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!