இந்தியாவில் மீண்டும் அதிவிரைவில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 20,557 பாதிப்பு!

0
இந்தியாவில் மீண்டும் அதிவிரைவில் பரவும் கொரோனா - ஒரே நாளில் 20,557 பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் அதிவிரைவில் பரவும் கொரோனா - ஒரே நாளில் 20,557 பாதிப்பு!
இந்தியாவில் மீண்டும் அதிவிரைவில் பரவும் கொரோனா – ஒரே நாளில் 20,557 பாதிப்பு!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முக்கிய தகவலை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. இது இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் அரசு கொரோனா தடுப்பு முகாம் மூலம் அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் புதிதாக தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசியும் இலவசமாக வழங்குகிறது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை தாண்டியுள்ளது கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – UIDAI அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,39,59,321ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,211ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் இன்று ஒரே நாளில் 19,216 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,86,787 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைதோர் விகிதம் 98.47 % உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.20 % ஆக குறைத்துள்ளது. தற்போது 1,46,323 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் 2, 03,21,82,347 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 40,69,241 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!