இந்தியா முழுவதும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா – ஒரே நாளில் 18,815 பேருக்கு பாதிப்பு!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் 2 ஆண்டுகளாகவே கொரோனாவின் தாக்கத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரானின் BA4, BA5 வகை வைரஸ் பரவல் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ்கள் அதிகம் பரவும் தன்மையுடன் இருப்பதால் தான் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி இருக்கிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் இன்று காலை 9 மணி வரை 24 மணி நேர நிலவரப்படி கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், பலியானவர்கள், இறந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
அதன் படி 24 மணி நேரத்தில் புதிதாக 18,815 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,34,78,054 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 38 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். அதனால் நாட்டில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,343 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 15,899 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,37,876 ஆக உயர்ந்துள்ளது. அதனால் குணமடைந்தோர் விகிதம் 98.51% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.28% ஆக குறைந்துள்ளது. மேலும் 1,22,335 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்